Posts

Showing posts from August, 2022

நிம்மதி வேண்டும் என்றால் முதல் விதி இதுவே

அனைவரும் வேண்டுவது மகிழ்ச்சியை ஆனால் நிம்மதி என்ற அடித்தளம் மேலே தான் மகிழ்ச்சி என்ற வீட்டை கட்ட முடியும் நிம்மதி பெற முதலில் செய்ய வேண்டியது உங்கள் வார்த்தைகளை பணத்தினை போன்று செலவழிப்பதே அனைத்து நேரத்திலும் அனைத்து விசயங்களுக்கும் உங்கள் கருத்தை கூறவேண்டும் என்று இல்லை உஙகள் கருத்து அங்கு தேவை என்றாலோ அல்லது உங்கள் கருத்து அங்கு மதிக்கப்படும் என்றால் மட்டும் கருத்து சொன்னால் போதுமானது மற்றும் அனைத்து விசயங்களும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை நமக்கு தெரியாத விசயங்களை பற்றி பேசும் பொழுது தெரியாது என்று கூற தயங்ககூடாது தயங்கினால் அவமானப்பட நேரிடும்.வார்த்தை சிக்கனம் வாழ்வின் நிம்மதி

இறைவன் பிரச்சனைகளையே விரும்புகிறான்

கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா இல்லையா இந்த கேள்வியில் இருந்தே இங்கு பிரச்சனை தொடங்கிவிடுகிறது சூரிய குடும்பத்தில் இதுவரை அறிவியளாளர்கள் சொன்னதை வைத்து பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலும் உயிர்கள் இல்லை.பல நூற்றாண்டிற்கு முன்பு பூமி தட்டையானது என்றார்கள் பிறகு கோளமானது என்றார்கள் சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்றார்கள் பிறகு பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றார்கள் அனைத்தையும் யாரோ சொல்கிறார்கள் நாம் நம்புகிறோம் கடவுளும் நம்பிக்கை சார்ந்த விசயமே ஒரு வேலை நாம் கடவுள் விளையாடும் வீடியோ கேம் ஆக இருக்கலாம் சரி தலைப்பிற்கு வருவோம் கடவுள் பிரச்சனையை விரும்பும் ஒருவராகவே இருக்கிறார் நீங்கள் இதிகாசங்களில் இல்லை பைபிளில் படிக்கும் கடவுள்கள் பிரச்சனை இல்லாமல் இருந்து பார்த்துள்ளீர்களா பிரச்சனை வேண்டாம் என்றால் கடவுள் ஆணை மட்டுமோ இல்லை பெண்னண மட்டுமோ படைத்து இருக்கலாம் அவ்வாறு இல்லாமல் இரு பாலினமாய் படைக்கும் போதே நாம் புரிந்து கொள்ள வேண்டும் கடவுளுக்கு பிரச்சனைகள் பிடிக்கும் நாம் நம் பிரச்சனைகளை எதிர் நோக்கி காத்திருக்க வேண்டும் 

தோல்விகளின் கதைகள்

அனைவரும் வெற்றிகளை எழுதிகொண்டிருக்க ஏன் இந்த தோல்வியின் கதைகளை பற்றி நான் எழுத விரும்பினேன் என தெரியவில்லை ஒரு வேலை எனக்கு சொல்லி கொல்ல வெற்றியின் கதைகள் இல்லாத காரணத்தால் தோல்வியின் கதைகளை தேர்ந்தெடுத்தேனா இல்லையே எனக்கு நிறைய வெற்றிகள் இருந்தனவே ஆனால் இப்போது தோல்விகள் மட்டும் தானே மிஞ்சியுள்ளன என்னை பற்றி நான் திரும்பி பார்க்க ஆசைபடுகிறேன் என்னுடைய பெரும் வெற்றியே என்னுடைய பெரும் தோல்வியாக அமைய போகிறது என எனக்கு தெரிந்து இருக்கவில்லை உன் தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாகு என மனம் கூறினாலும் இல்லை வேறு எதாவது செய்து வெற்றி பெற்று விடுவேன் என தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் போராடும் பொழுதும் மீண்டும் மீண்டும் சமீப கால தோல்விகளை அனுபவித்து வரும் நான் சரி இறுதியாக நம் தோல்வி கதைகளை சொல்லிவிட்டாவது அமைதியாகலாம் என எழுத தொடங்கியதே தோல்வி கதைகள்